சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஜெர்மனி! March 7, 2023 10:38 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest உக்ரைனில் நடந்து வரும் போரில் ரஷியாவுக்கு ஆதரவாக ஆயுதங்களை சீனா வழங்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்ஸ் எச்சரித்துள்ளார். அமெரிக்காவிற்கு சென்ற ஜேர்மன் அதிபர் சி.என்.என். செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின்போதே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதன்போது ஒருவேளை ரஷியாவுக்கு ஆயுதங்களை சீனா வழங்கினால் அந்நாடு மீது தடை விதிப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜேர்மன் அதிபர், அதுபோன்று நடக்க கூடாது என நாங்கள் தெளிவுப்பட கூறி வருகிறோம். இந்த விவகாரத்தில் எங்களது கோரிக்கை வெற்றி பெறும் என்று நல்ல முறையிலேயே எண்ணுகிறேன்.ஆனால், இந்த விசயத்தில் நாங்கள் கவனம் செலுத்தி, மிக மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இல்லையெனில் சீனா அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டும் எனவும் கூறினார்.ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி மிக பெரிய பொருளாதார நாடாக உள்ளது. அதேசமயம் சமீப ஆண்டுகளாக ஜெர்மனியுடன் தனிப்பட்ட முறையில் மிக பெரிய அளவில் வர்த்தக நடைமுறைகளை மேற்கொள்ளும் நாடாகவும் சீனா இருந்து வருகிறது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் உடைகள்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… ஈரானில் மூன்று மரண தண்டனையில் இருந்து தப்பிய நபர் சிறையில் பரிதாப மரணம்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… கனடாவில் உணவுப் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…