சஜித் கட்சியின் தேசியப்பட்டியலில் அதிகமான பேராசிரியர்கள் நியமனம்! March 18, 2023 3:15 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் அதிகமான பேராசிரியர்கள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளனர். அவர்களின் பெயர்ப்பட்டியலை கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச இப்போதே தயாரித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் அடிப்படையில் 41 பேராசிரியர்கள் சஜித்தின் தேசியப்பட்டியலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிரசாரம் குருநாகலில் ஆரம்பித்து வைக்கப்பட்டபோது அதில் கவனிக்கத்தக்க முக்கிய அம்சம் ஒன்று இருந்தது. அதுதான் 25 பேராசிரியர்கள் அந்த மேடையில் அமர்ந்திருந்தமை. அப்படியென்றால் சஜித் எப்படிப்பட்ட ஆட்சி ஒன்றுக்குத் தயாராகின்றார் என்பதைப் புரிந்துகொள்ளலாம் என்று ஐக்கிய மக்கள் சக்தி வட்டாரம் தெரிவிக்கின்றது. முழுமையான நல்ல கல்விமான்களை உள்ளடக்கிய அரசு ஒன்றை அமைப்பதற்கே அவர் தயாராகி வருகின்றார் என்று அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…