அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சிறுவர்களுக்கு நேர்ந்த கதி! March 21, 2023 10:27 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் நள்ளிரவில் சாலை விபத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து சிறுவர்கள் மொத்தமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் பிரதான சாலையில் நடந்துள்ள இந்த விபத்தில் கொல்லப்பட்ட சிறார்கள் அனைவரும் 8ல் இருந்து 17 வயதுடையவர்கள் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், விபத்தில் சிக்கிய அந்த வாகனத்தை செலுத்திய சாரதிக்கு 16 வயதிருக்கலாம் என பொலிசார் நம்புகின்றனர். பறக்கும் வேகத்தில் சென்ற அந்த வாகனம், சலையோர மரத்தில் மோதி, நெருப்பு கோளமாக மாறியுள்ளது. இதில் 9 வயது சிறுவன், அதிர்ஷ்டவசமாக வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு, காயங்களுடன் தப்பியுள்ளான். முதற்கட்ட விசாரணையில், உயிருக்கு ஆபத்தான காயங்கள் இல்லை என்றே மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொல்லப்பட்ட ஐவரில் ஒரு சிறுமியும் இருந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. பலியான சிறுவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தினர் எனவும் சமீபத்தில் தான் இவர்கள் நியூயார்க் நகரத்தில் இருந்து நியூ ஹேவன் கவுண்டி பகுதியில் குடியேறியுள்ளனர். ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகத்தில் இந்த குடும்பத்தினர் பதிவு செய்யவில்லை என்றே விசாரணையில் தெரியவந்துள்ளது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் உடைகள்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… ஈரானில் மூன்று மரண தண்டனையில் இருந்து தப்பிய நபர் சிறையில் பரிதாப மரணம்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… கனடாவில் உணவுப் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…