பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலத்தை நீடிக்க அமைச்சரவை அனுமதி March 29, 2023 8:59 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் பதவிக்காலத்தை மேலும் 03 மாதங்களுக்கு நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கான பத்திரத்தை மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.இந்நிலையிலேயே பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு 60 வயது நிறைவடைவதை தொடர்ந்து அவர் கடந்த மார்ச் (26.03.2023)ஆம் திகதி ஓய்வுபெற்றுச் செல்லவிருந்தார்.இவ்வாறான சூழலில் அவரது சேவையை மேலும் மூன்று மாத காலங்களுக்கு நீடிக்கவே அமைச்சரவை அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இதற்கிணங்க அவர் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குப் பொலிஸ்மா அதிபர் பதவியை வகிப்பார் என அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…