அர்ஜூன ரணதுங்கவை பதவி விலகுமாறு கோரிக்கை

தேசிய விளையாட்டுச் சபையின் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுமாறு அர்ஜுன ரணதுங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சரின் சிரேஸ்ட ஆலோசகர் சுதத் சந்திரசேகரவினால் எழுத்து மூலம் கோரப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு சூம் தொழிநுட்பம் ஊடாக நடைபெறவிருந்த சபையின் கூட்டத்திற்கு, அதன் உறுப்பினர்கள் எவரும் பங்கேற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சபையின் உறுப்பினர்கள் அர்ஜுனவின் தலைமைப் பொறுப்பினை ஏற்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!