மனோ கணேசனின் கோரிக்கையை நிராகரித்தது டயஸ்போரா அமைப்பு! April 12, 2023 12:51 pm Twitter Facebook Google+ LinkedIn Pinterest சிங்கள பெரும்பான்மையினருடன் தமிழர்கள் இணைந்து வாழ வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் விடுத்துள்ள கோரிக்கையைத் தாம் நிராகரிப்பதாக நியூயோர்க்கை தளமாகக் கொண்ட தமிழ் டயஸ்போரா அமைப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் அந்த அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.இந்து கோவில்களைச் சிங்கள பௌத்த விகாரைகள் மூலம் ஆக்கிரமிப்பு செய்கின்றநிலையில் இந்த சாத்தியமற்றது என்று தமிழ் டயஸ்போரா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.இலங்கையில் ஒன்றுபட்ட, பிரிக்கப்படாத நாட்டில் வாழும் நோக்கத்துடன் தமிழர்கள் ஒரு நாடாளுமன்ற அரங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற மனோ கணேசனின் அண்மைய வலியுறுத்தலையடுத்தே இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.இலங்கையில் 75 ஆண்டுகால இனப்படுகொலை நடைமுறைகள் மற்றும் இனச் சுத்திகரிப்பு முயற்சிகள், இலங்கையில் உள்ள தமிழர்களின் அவலத்தை ஹோலோகாஸ்டின் போது யூதர்கள் திட்டமிட்ட வகையில் கொல்லப்பட்டமைக்கு ஒப்பிடமுடியும் என்றும் தமிழ் டயஸ்போரா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.சிங்கள இனவாதம், ஆக்கிரமிப்பு, அடக்குமுறை மற்றும் பிற மதங்கள் மற்றும் மொழிகள் மீதான வெறுப்பு ஆகியவற்றால், இலங்கை மற்றும் தமிழ் இறையாண்மை கொண்ட தேசம் பிளவுபட்டுள்ளது என்றும், நல்லிணக்கமும் ஒற்றுமையும் தற்போது சாத்தியமற்றது என்றும் தமிழ் டயஸ்போரா அமைப்பின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…