வரலாற்று நிகழ்வு என்கிறார் ஜப்பானிய நிதியமைச்சர்!

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கை தொடர்பில், இந்தியா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகள், இருதரப்பு கடன்வழங்குநர்களிடையே பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான பொதுவான தளமொன்றை அறிவித்துள்ளன.
 
இந்த நடவடிக்கை எதிர்காலத்தில் நடுத்தர வருமான நாடுகளின் கடன்நெருக்கடியை தீர்ப்பதற்கான ஒரு முன்மாதிரியாக அமையும் என அவைநம்பிக்கை வெளியிட்டுள்ளன.

இலங்கையின் கடன்வழங்குநர்கள் மத்தியில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக இந்த வருடம் ஜி 7 நாடுகளிற்கு தலைமை வகிக்கும் ஜப்பான் மேற்கொண்டுள்ள இந்த முயற்சியில் இலங்கைக்கு அதிக கடன்களை வழங்கிய சீனா இணைந்து கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இவ்வாறான பரந்துபட்ட கடன்வழங்குநர்கள் குழு மத்தியில் இந்த பேச்சுவார்த்தையை ஆரம்பித்து வைக்க முடிந்துள்ளமை ஒரு வரலாற்று நிகழ்வு என ஜப்பானின் நிதியமைச்சர் சுனிச்சி சுசிக்கி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!