உடல் வெப்பநிலை தீவிர எச்சரிக்கை நிலை வரை அதிகரிக்கும்! பல மாவட்டங்களுக்கு கடுமையான அறிவுறுத்தல்

கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், அநுராதபுரம், குருணாகல், மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்வுகூரப்பட்டுள்ளது.

இன்றைய தினத்திற்கான காலநிலை தொடர்பில் இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும், குறித்த மாவட்டங்களில் மனித உடல் வெப்பநிலை தீவிர எச்சரிக்கை நிலை வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகறிது.

எனவே மக்கள் வெளியிடங்களில் தேவையற்ற விதமாக நடமாடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அதிக நீரை பருகுமாறும் வெளிர்நிறத்திலான மெல்லிய ஆடையை அணியுமாறும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!