ஜேர்மனியின் 20க்கும் மேற்பட்ட தூதர்களை வெளியேற்றுவதாக அறிவித்த ரஷ்யா!

ரஷ்ய தூதர்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, 20க்கும் மேற்பட்ட ஜேர்மனி தூதர்களை வெளியேற்றுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ஜேர்மனி பல ஆண்டுகளாக மாஸ்கோவுடன் ஆழமான பொருளாதார உறவுகளை பராமரித்து வந்தது. குறிப்பாக ரஷ்ய எரிவாயு பரிமாற்றத்தில் இருநாடுகளும் நல்ல உறவில் இருந்தன.
    
ஆனால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் இரு நாடுகளில் உறவுகள் மோசமடைந்தது. அதன் ஒரு பகுதியாக பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, 40 ரஷ்ய தூதர்களை ஜேர்மனி வெளியேற்றியது.

இந்த நிலையில் ஜேர்மனிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 20க்கும் மேற்பட்ட ஜேர்மன் தூதர்களை வெளியேற்றுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மேலும், பெர்லின் நட்புறவை அழித்துவிட்டதாக குற்றம்சாட்டும் ரஷ்யா, அந்நாட்டின் விரோத நடவடிக்கைகளுக்கு பதிலடியாக இந்த முடிவை பிரதிபலிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!