ஈஃபிள் கோபுரத்திற்கு முன்பு குத்தாட்டம் போட்ட பிரபல பாப் பாடகி கைது!

பாரிஸின் முக்கிய சுற்றுலாத்தலமான ஈஃபிள் கோபுரத்திற்கு முன்பு குத்தாட்டம் போட்ட பிரபல பாப் பாடகி கிரே நிக்கோல் கைது செய்யப்பட்டுள்ளார். பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாப் பாடகி கிரே நிக்கோல், இவர் தனது தோழியுடன் பிரான்சிற்கு சுற்றுலா சென்றுள்ளார். உலகப் புகழ் பெற்ற ஈஃபிள் கோபுரத்திற்கு சென்ற அவர்கள் சந்தோசத்தில் சாலையின் நடுவே குத்தாட்டம் போட்டனர்.

இரு புறங்களிலும் வாகனங்கள் சென்றுகொண்டிருந்த நிலையில் அவர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். இந்தக்காட்சியை கிரே நிக்கோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில், கிரே நிக்கோல் மற்றும் அவரின் தோழி ஆகிய இருவரும் சாலையின் நடுவே அனுமதியின்றி நடனமாடி பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக செயல்பட்டதால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சிலர் இவர்களை கடுமையாக விமர்சித்துள்ளனர். இவர்களது ஆட்டத்தை கண்டு ரசித்த சிலர் ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!