மைத்திரியை தூக்கு மேடைக்கு அனுப்ப ஆசைப்படும் நபர்! அவரே வெளியிட்ட தகவல்

விசாரணைகளை வேகமாக பூர்த்தி செய்து என்னை சிறைக்கு அல்லது தூக்கு மேடைக்கு அனுப்ப கர்தினால் ஆசைப்படுகின்றார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், 

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்படவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் விரும்புகின்றார் என தெரிவித்துள்ளார். உயிர்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் கத்தோலிக்க திருச்சபை பொறுமையை கடைப்பிடிக்க தவறியுள்ளது.

உயிர்த்தஞாயிறுதாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் மூலம் இதுவரை உறுதியான முடிவுகள் எவையும் எட்டப்படவில்லை. உலக நாடுகள் சிலவற்றில் இவ்வாறான பயங்கரவாத தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் பத்து அல்லது பதினைந்து வருடங்கள் நீடித்தன.
விசாரணைகளை வேகமாக பூர்த்தி செய்து என்னை சிறைக்கு அல்லது தூக்குமேடைக்கு அனுப்ப கர்தினால் ஆசைப்படுகின்றார். விசாரணைகள் முடிவடையாமலே இந்த குற்றத்தை செய்வதற்கு அவர் விரும்புகின்றார்.

விசாரணைகளின் போது பல முக்கிய விடயங்களிற்கு பதில் இல்லாத நிலையே காணப்படுகின்றது.   இலங்கைக்கு விசாரணைக்கு உதவிய பல சர்வதேச அமைப்புகளின் அறிக்கைகளையும் கருத்தில்கொள்ளவேண்டும்  என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2019 முதல் விசாரணைகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டன என்பது குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ள மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சில குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளார் என்றும் கூறினார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!