ஜனாதிபதியால் வழங்கப்பட்ட நியமனங்கள்!

நாட்டின் தேசிய கொள்முதல் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்புச் சபையின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் குறித்த உறுப்பினர்கள் இன்றைய தினம் (03.05.2023) நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, ஆணைக்குழுவின் தலைவராக டபிள்யூ. சுதர்மா கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக வர்ணகுலசூரிய இவன் திசேரா, டி. பியசிறி தரணகம, சுமந்திரன் சின்னகந்து, மற்றும் ஏ.ஜி. புபுது அசங்க குணவம்ச ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!