பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் மக்கள் அச்சமடை வேண்டாம்: ரணில்

சதியூடாக எனது ஆட்சியைக் கவிழ்க்க முடியாது, அதற்கு நான் இடமளிக்கமாட்டேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சூளுரைத்துள்ளார். சதி முயற்சி தொடர்பான உளவுத் தகவல்களையடுத்து கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகமொன்று கேள்வி எழுப்பிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் மக்கள் அச்சமடையத் தேவையில்லை. உளவுத் தகவல்களுக்கு அமைவாக அவை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சதி நடவடிக்கை ஊடாக ஆட்சியைக் கவிழ்க்க முயன்றால் அது நிச்சயமாகத் தோல்வியில்தான் முடியும் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!