மின்சார கட்டணத்தை குறைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

மின்சார கட்டணத்தை 3 சதவீதம் குறைக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் மின்சார கட்டணத்தை குறைக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (18.05.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய நிலவரப்படி மின்சாரக் கட்டணத்தை உண்மையில் 27 சதவீதம் குறைக்க முடியும் எனவும் தவறான தரவுகளின் அடிப்படையில் அதிகாரிகள் மக்களை தவறாக வழிநடத்துவதாக ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!