சுற்றிவளைக்கப்பட்ட நாடாளுமன்றம்! சவேந்திர சில்வாவிற்கு வழங்கப்பட்ட ஆலோசனை

மக்கள் போராட்டத்தின்போது இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா என்னிடம் ஆலோசனை பெற்றது உண்மைதான். அப்போது மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டாம் என நான் அறிவுறுத்தல் வழங்கினேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகம் சுற்றிவளைக்கப்பட்ட தருணத்தில் சவேந்திர சில்வா இரு தடவைகள் என்னுடன் கதைத்தார். போராட்டத்துடன் எனக்கு தொடர்பு இருந்தது. நான் நாடாளுமன்ற உறுப்பினரும்கூட.

எனவே, நாடாளுமன்ற உறுப்பினருடன் கதைப்பதற்கு பாதுகாப்பு தரப்பினருக்கு தடை இல்லை. அத்துடன், நான் இராணுவ பிரதானியாக இருந்தவன். அந்தவகையில் கதைத்திருக்கலாம்.
மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டாம். முடியுமென்றால் அரசியல்வாதிகளை வெளியேற்றுங்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!