கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அலி சப்ரி ரஹீம் எம்.பி அதிரடியாக கைது..!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான அவர் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த போது கைதாகியுள்ளார்.

3.5 கிலோகிராம் தங்கத்துடன் அவர் சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய நிலைய தகவல்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.  மேலும் அவர் தற்போது சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!