இலங்கையில் கடந்த வாரம் அச்சிடப்பட்டுள்ள கோடிக்கணக்கான பணம்..!

கடந்த வாரம் இலங்கை மத்திய வங்கியால் 18 ஆயிரத்து 900 கோடி ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை தெரிவிக்கின்றது. அதேபோல் 18 ஆயிரம் கோடி ரூபா பணத்தை மத்திய வங்கி கடனாகவும் பெற்றுள்ளதாக தெரியவருகிறது. 

இதன் அடிப்படையில் மத்திய வங்கி இலங்கை அரசாங்கத்திற்கு கடந்த வரம் 36 ஆயிரத்து 900 கோடி ரூபாவை வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  பணம் அச்சடிக்க வேண்டாம் என்று சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திற்கு நிபந்தனை வழங்கியுள்ள நிலையிலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!