இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய ஓய்வூதிய முறை! வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

இலங்கையில் எதிர்காலத்தில் புதிய ஓய்வூதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் அறிவித்துள்ளார்.களுத்துறை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், பங்களிப்பு ஓய்வூதிய முறையையே அரசாங்கம் அறிமுகம் செய்ய உள்ளது.
அந்த முறையை நடைமுறைப்படுத்திய உலகின் பல நாடுகள் வெற்றிகரமான பெறுபேறுகளைப் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். 


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!