முதல் நாளே செங்கோல் வளைந்துவிட்டது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

டெல்லியில் மல்யுத்த வீரர்களை பொலிஸார் கைது செய்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். புதிய நாடாளுமன்ற திறப்பு இன்று நடந்தது. அதனையொட்டி நாடாளுமன்றம் நோக்கி மல்யுத்த வீரர்கள் பேரணியாக சென்றனர். அப்போது தடையை மீறி சென்றதாக பொலிஸார் அவர்களை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
    
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘போராட்டம் நடத்தியவர்களை இழுத்துச் சென்றும், தூக்கிச் சென்றும் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. செங்கோல் முதல் நாளே வளைந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது’ என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!