மொட்டுத் தயவில் இயங்கும் அரசு: பதவிக்காக ஜனாதிபதியின் காலில் விழவில்லை – நாமல் காட்டம் June 5, 2023 8:31 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest “மொட்டுக் கட்சியால் தான் இந்த அரசு இயங்கு நிலையில் உள்ளது. எனவே, மொட்டுக் கட்சியினரைப் புறக்கணித்து இந்த அரசால் எதனையும் செய்ய முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மொட்டுக் கட்சியினர் எவரும் அமைச்சுப் பதவி வேண்டும் என்று ஜனாதிபதியின் காலில் விழவில்லை. அமைச்சுப் பதவியை யாருக்கு வழங்க வேண்டும், யாருக்கு வழங்கக் கூடாது என்று முடிவெடுக்க அவருக்கு முழு உரித்துண்டு. மொட்டுக் கட்சியால் தான் இந்த அரசு இயங்கு நிலையில் உள்ளது.எனவே மொட்டுக் கட்சியினரைப் புறக்கணித்து இந்த அரசால் எதனையும் செய்ய முடியாது. இந்த அரசு மொட்டு அரசுதான். மக்கள் ஆணை இன்னமும் இந்த அரசுக்கு உண்டு. எந்தத் தேர்தல் நடந்தாலும், அதை எமது கட்சி நிரூபித்துக் காட்டும்” என தெரிவித்துள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…