மத சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட இருவர்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மதம் சார்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை வௌியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நதாசா மற்றும் புரூணோவின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. நதாசா, புரூணோ இருவரும் இன்றையதினம்(07.06.2023) கோட்டை மாஜிஸ்திரேட் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாண்ட்அப்(Stand-up) நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றின் மூலம் பௌத்த மதம் சார்ந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருவரும் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் (21.06.2023)ஆம் திகதி வரை இருவரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் திலிண கமகே உத்தரவிட்டுள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!