கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை இலங்கை பாதுகாக்க வேண்டும்!

கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை இலங்கை பாதுகாக்க வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது டுவிட்டர் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு பிரஜைக்கும் கருத்து சுதந்திரத்திற்குள்ள உள்ள உரிமையே ஜனநாயகத்திற்கான முக்கியமான அம்சம் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையை மீளகட்டியெழுப்பும் ஸ்திரமானதாக்கும் அனைத்து இலங்கையர்களிற்கும் வளமானதாக்கும் இலங்கையின் முயற்சிகளிற்கு இந்த அடிப்படை உரிமை பாதுகாக்கப்படுதல் மிகவும் அவசியம் எனவும் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!