மலேசியாவின் ‘அன்னை தெரசா’ காலமானார்! June 13, 2023 9:31 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest மலேசியாவின் ‘அன்னை தெரசா’ என அழைக்கப்படும் ‘மதர் மங்களம்’ உடல்நலக் குறைவால் தனது 97ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மலேசியாவின் புச்சோங்கில் 1949ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘பியோர் லைஃப் சொசைட்டி’ என்ற ஆதரவற்ற மற்றும் ஆதரவற்றோருக்கான சமூக சேவை அமைப்பின் வாழ்நாள் தலைவராக இருந்தவர் ஏ.மங்களம் ஆவார். இவர், மலேசியா மதங்களுக்கு இடையிலான அமைப்பின் துணைத் தலைவராகவும், வளர்ச்சியில் பெண்களை ஒருங்கிணைப்பதற்கான தேசிய ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.தனது மனிதாபிமான பணிகளுக்காக ‘மலேசியாவின் அன்னை தெரசா’ என இவர் அழைக்கப்பட்டார்.இரண்டு வாரங்களுக்கு முன்பு மூச்சுக்குழாய் நிமோனியாவுக்காக அசுண்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் சனிக்கிழமை (ஜூன் 10) காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் உடைகள்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… ஈரானில் மூன்று மரண தண்டனையில் இருந்து தப்பிய நபர் சிறையில் பரிதாப மரணம்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… கனடாவில் உணவுப் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…