ராஜபக்சர்களைப் பாதுகாக்கும் எந்த தரப்புடனும் உறவு வைக்க மாட்டோம் – சஜித் உறுதி June 14, 2023 9:03 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest இந்த நாட்டை அழித்த ராஜபக்சர்களைப் பாதுகாக்கும் எந்த தரப்புடனும் எந்த விதமான உறவையும் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்படுத்தாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தி ஒரு புதிய கட்சியாகும், இது இந்த நாட்டின் பலமான மக்கள் சார் கட்சியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அம்பாறையில் நேற்று (13.06.2023) நடைபெற்ற கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது வரிசைகள் இல்லை என்று பல நபர்கள் வீராப்பு பேசினாலும் 2019இல் இருந்ததைப் போன்று எரிபொருள் உள்ளதா என நாம் வினவுகின்றோம்.ஊட்டச்சத்தான உணவு இல்லாவிட்டாலும் தற்பெருமை பேசுவதை நிறுத்த முடியாது.ஆட்சிக்கு வந்த இரண்டு மாதங்களிலேயே தனது நண்பர்களுக்கு பலகோடி வரிச்சலுகைகளை வழங்கிய தற்போதைய அரசு, வங்குரோத்தான நாடு இருந்ததை விட சிறப்பாக உள்ளது எனக் கூறுவது கேலிக்குரியது. வங்குரோத்து நிலைக்கும் பல்வேறு படி நிலையை அவர்களாகவே கொண்டுள்ளனர் என்றார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…