விடுதலைப்புலிகள் என்றால் சிங்களவர்களுக்கு பயம்!

விடுதலைப்புலிகள் என்றால் சிங்களவர்களுக்கு பயம் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து எங்களுடைய மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் உயிர் தியாகம் செய்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். நாடாளுமன்றத்தில் இருக்கும் பெரும்பாலான எம்.பிக்கள் என்னை பலவாறு தாக்கி பேசியுள்ளனர்.

அவர்களுக்கு இருக்கும் பிரச்சினை நான் சிங்கள மொழியில் பேசும் போது சிங்களவர்கள் மத்தியிலும் எனது கருத்து செல்கின்றது. எனவே தமிழர்களுக்கு பிரச்சினை உள்ளதாக சிங்கள மக்கள் யோசிக்கும் போது, அது தங்களுக்கு பாதகமாக அமையும் என நினைக்கிறார்கள்.
சிங்கள மக்களை கொல்வதுதான் புலிகளின் நோக்கம் என அவர்கள் நினைக்கிறார்கள் மற்றும் சிங்களவர்களுக்கு விடுதலைபுலிகள் என்றால் பயம். என கூறியுள்ளார்.
      

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!