அரசாங்கத்துடன் இணையுமாறு ஜனாதிபதி அழைப்பு!

போலியான தகவல்களை முன்வைத்து தொடர்ந்தும் தோல்வி காண்பதற்கு பதிலாக நாட்டு மக்களின் பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்காக அரசாங்கத்துடன் இணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
    
ஹம்பாந்தோட்டை மாகம் ருஹுனு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ‘அமரவிரு அபிமன் 32’ பாராட்டு விழாவில் கலந்துகொண்டு ஜனாதிபதி உரை நிகழ்த்தினார். விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவின் அரசியல் வாழ்க்கையின் 32 வருட பூர்த்தியை முன்னிட்டு இந்த பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் எதிர்கட்சியினால் முன்வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் உண்மைக்குப் புறம்பானதென்பது தெளிவாகியுள்ளது என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!