தாலிபான் அரசின் முடிவால் அதிர்ச்சியில் பெண்கள்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருவதுடன் அங்கு கடுமையான பழமைவாத சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது . இதற்காக உலகம் முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கும் நிலையில் அழகு சாதன நிலையங்களை நடத்துவதற்கும் தலிபான் அரசு தடை விதித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலிபான் அரசின் துணை மற்றும் நல்லொழுக்க அமைச்சகத்தின் அமைச்சர் முகமது அக்கிப் மஹ்ஜர் செய்தியாளர்களின் சந்திப்பின்போது இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அழகு கலை கலைஞர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். இந்த சட்டம் தற்போது கிராமப்புறங்களில் மட்டுமல்லாது காபூல் போன்ற பெரிய நகரங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

தலிபான் அர்சாங்கத்தின் இந்த சட்டம் தொடர்பில் அழகு கலை நிபுணர் ஒருவர், ஆண்கள் வேலை இருந்தாலும் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார்கள். இந்நிலையில் எங்களையும் வேலை செய்யவிடாமல் இது போன்ற சட்டங்களை இயற்றினால் பசியால் சாகவேண்டும் என விரக்தியுடன் தெரிவித்து இருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!