ஜனாதிபதிக்கு எதிரான சாட்சியங்கள் உள்ளது! சுனில் வட்டகல விடுக்கும் பகிரங்க எச்சரிக்கை July 11, 2023 8:53 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக குற்றப் பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கு தேவையான சாட்சியங்கள் தம்மிடம் காணப்படுவதாக தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர், சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்துவதற்கு போதிய அளவு பணம் இல்லை என ஜனாதிபதி கூறிவருவதாகவும் இது ஓர் பொய்யான காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,ஜனாதிபதிக்கு எதிராக குற்ற பிரேரணை ஒன்றை கொண்டுவர முடியும்.இது தொடர்பில் திறைசேரியின் செயலாளரிடமிருந்து ஆவணம் ஒன்றை தாம் பெற்றுக்கொண்டுள்ளோம். கடந்த பெப்ரவரி மாதம் அளவில் நாட்டில் 6 ஆயிரம் கோடி அளவில் மேலதிக வருமானம் காணப்படுகின்றது.உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்துவதற்கு ஏழு பில்லியன் ரூபாய் தேவைப்படும் என குறிப்பிடும் அவர் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு போதிய அளவு பணம் இல்லை என கூறுவது உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதியை குற்றம் சுமத்தியுள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…