கொழும்பில் இருந்து விசேட ரயில் யாழ்ப்பாணம் வந்தது!

கொழும்பு – கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி விசேட ரயில் நேற்றுப் பயணித்தது. அனுராதபுரம்- வவுனியா வரையில் அமைக்கப்பட்ட புதிய ரயில் பாதை அமைப்பின் கண்காணிப்பு நடவடிக்கையாக, இந்த விசேட ரயிலில் போக்குவரத்து, பெருந் தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன உட்பட்ட ரயில்வே திணைக்கள அதிகாரிகள் யாழ்ப்பாணம் வருகை தந்தனர்.
    
இந்த விசேட ரயிலானது அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டு யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்தை மாலை 3 மணியளவில் வந்தடைந்தது. போக்குவரத்து, பெருந் தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணரத்னவை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் வரவேற்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!