கறுப்பு ஜூலையில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் புலிகளாம்!

கறுப்பு ஜூலை கலவரத்தில் கொழும்பில் கொல்லப்பட்டது தமிழ் மக்கள் அல்ல. அனைவரும் விடுதலைப் புலிகளே. அவர்களை இங்கே நினைவுகூர அனுமதிக்க முடியாது என்று சிங்கள ராவய அமைப்பினர் கோஷம் எழுப்பினர்.
    
பொரளை பொதுமயானத்துக்கு அருகில் கறுப்பு ஜூலை இனப்படுகொலை நினைவேந்தல் நேற்று கடைப்பிடிக்க திட்டமிட்ட நிலையில் சிங்கள ராவயவினர் அங்கு வந்து குழப்பம் விளைவித்தனர். இதன்போதே இவ்வாறு கோஷம் எழுப்பினர்.

“புலம்பெயர் தமிழர்கள் நாட்டைப் பிரிக்க முயல்கின்றார்கள். அரச சார்பற்ற நிறுவனங்களிடம் பணத்தைப் பெற்று இப்படியான நினைவேந்தல்களை இங்கு செய்யவேண்டாம்” – என்றும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!