சர்வகட்சிக் கூட்டம் – புறக்கணிக்கும் ஜேவிபி!

ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள சர்வ கட்சி கூட்டத்தை தேசிய மக்கள் சக்தி புறக்கணிப்பதாக அதன் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தீர்மானிப்பதற்காக ஜனாதிபதியால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள சர்வக்கட்சி கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது.

இதேவேளை, சர்வ கட்சி கூட்டம் தொடர்பில் இன்று இரவு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இணையவழி தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!