வெளிநாடொன்றில் மகனின் இறுதிச்சடங்கில் 13 பேரை சுட்டுக் கொன்ற தந்தை!

காங்கோவில் மகனின் இறுதிச்சடங்கில் 13 பேரை உயிரிழந்தவரின் தந்தை சுட்டுகொன்ற சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. காங்கோ நாட்டில் நையகோவா என்ற பகுதியை சேர்ந்தவர் முகுவா. கடற்படை வீரரான இவரது மகன் திடீரென இறந்து விட்டார். இவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தபோது ஏராளமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
    
அப்போது திடீரென ஆவேசம் அடைந்த முகுவா தான் வைத்திருந்த துப்பாக்கியால் மகன் இறுதி சடங்கில் பங்கேற்ற கூட்டத்தினர் மீது சரமாரியாக சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உயிருக்கு பயந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.

இந்த துப்பாக்கி சூட்டில் 9 குழந்தைகள் உள்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து உயிரிழந்ததுடன் பலர் படுகாயம் அடைந்தனர். காயமடைத்தவர்கள் சிகிற்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதுடன் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!