ஜூலி சங் மீள அழைக்கப்பட்டதாக பரவும் வதந்தி! – அமெரிக்க தூதரகம் மறுப்பு. August 1, 2023 10:27 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் வொசிங்டனுக்கு மீள அழைக்கப்படவில்லை என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங், ட்விட்டரில் செயலூக்கமுள்ளவராக இருப்பதுடன், இலங்கை தொடர்பான முக்கியமான சமூக மற்றும் அரசியல் விவகாரங்களில் அமெரிக்க அரசாங்கத்தின் கருத்துக்களை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார்.ஜூலி சாங் மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளதாகவும், டிசம்பரில் இலங்கையை விட்டு வெளியேறுவதாகவும், அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.எனினும் ஜூலி சாங்கை திரும்ப அழைக்க அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமும் எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும், அந்த தகவல் முற்றிலும் போலியானது எனவும் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகமும், உறுதிப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி ஜோ பைடனால் பரிந்துரைக்கப்பட்ட ஜூலி சாங் 2022இல் இலங்கைக்கான தூதுவராக பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…