வெளிநாட்டுப் பிரமுகர்களுடன் செல்பி எடுக்கத் தடை!

இலங்கைக்கு வருகை தரும் அரச தலைவர்கள் அல்லது பிரமுகர்களுடன் தனிப்பட்ட ரீதியில் புகைப்படங்கள் கோரவோ அல்லது எடுக்கவோ வேண்டாம் என ஜனாதிபதி செயலகம் பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
    
அவ்வாறான வருகைகள் பற்றிய எந்தவொரு தகவலும் அந்தந்த உத்தியோகபூர்வ ஊடக அறிக்கைகளுடன் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜூலை 28 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, ஜனாதிபதி செயலக பணியாளர்கள், அவருடன் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

பணியாளர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் சமூக ஊடகங்களில் எதிர்மறையான கருத்துக்கள் எழுந்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிலையில், இந்த விடயத்தை மேற்கோள்காட்டி இந்த புதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!