ஆர்ப்பாட்டங்கள் தீர்வை கொண்டு வராது!

அரசியல் வட்டாரத்தில் தன்னை தனிப்பட்ட முறையில் பிடிக்காத பலர் உள்ளது தனக்கு தெரியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
    
நாட்டின் தலைவிதியை மாற்ற முடியும் என தெரிந்திருந்தால் கிட்டத்தட்ட அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் மீண்டும் அரசியலில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார் கடந்த வருடம் நான் உங்களை சந்தித்தவேளை இலங்கையின் எதிர்காலம் மிகவும் இருள்மயமானதாக காணப்பட்டது உங்கள் மனங்களில் இலங்கை குறித்து கேள்வி காணப்பட்டது ஆனால் நீங்கள் அனைவரும்ஒத்துழைத்தீர்கள் என அவர் தெரிவித்துள்ளார். ஆனால் நீங்கள் ஒத்துழைத்தீர்கள் அதற்காக நான் உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்

கடந்த வருடம் எங்களின் பிரச்சினை என்னவென்றால் நாங்கள் தீர்வுகள் நாங்கள் முன்னெடுக்க கூடிய யதார்த்தபூர்வமான நடவடிக்கைகள் குறித்து சிந்திக்கவில்லை நாங்கள் அதன் அரசியல் குறித்தே எங்கள் கவனத்தை திசைதிருப்பியிருந்தோம்.. மக்கள் அழுத்தங்கள் காரணமாக விரக்தியடைவதை என்னால் புரிந்துகொள்ள முடியும் ஆனால் ஆர்ப்பாட்டங்கள் தீர்வை கொண்டு வருவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!