அனைத்து இந்தியர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! அமைச்சர் ஜீவன் August 15, 2023 9:52 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest எம் தொப்புள் கொடி உறவுகளான தமிழக மக்கள் உட்பட அனைத்து இந்தியர்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு வழங்கிய வாழ்த்துரையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஒட்டுமொத்த உலகுக்கும் அஹிம்சையை போதித்த பாரத தேசம் சுதந்திரமடைந்து இன்றோடு (15.08.2023) 77 ஆண்டுகளாகின்றன. சுதந்திரத்துக்கு பின்னர் பல சவால்களை சந்தித்திருந்தாலும் இந்தியா இன்று பாரிய பொருளாதார சக்தியாக மாறியுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. 2030 ஆம் ஆண்டளவில் உலகில் மூன்றாவது பெரும் பொருளாதார சக்தியாக இந்தியா மாறக்கூடும். இதனால் இலங்கைக்கும் பல நன்மைகள் கிட்டும். தெற்காசியாவின் காவலனான இந்தியா, எல்லா சந்தர்ப்பங்களிலும் இலங்கைக்கு கைகொடுத்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, உதவிகளை வழங்கி இலங்கை மீண்டெழ சுவாசம் தந்ததே இந்தியாதான் என்பதை இந்த மகத்துவமான நாளில் நன்றியுடன் நினைவுகூருகின்றேன். இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் மேம்பாட்டுக்காக மூவாயிரம் மில்லியன்களை இந்தியா வழங்கியுள்ளது.பல்வேறு நெருக்கடிகளில் இருந்தும் மலையக மக்கள் சுதந்திரம்பெற இந்நிதி பயன்படுத்தப்படும் என்ற உறுதிமொழியையும் இந்த சுதந்திர நாளில் தெரிவித்துக்கொள்கின்றேன். இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவு என்பது பூகோள அரசியல் அல்ல. மாறாக அது உணர்வுடன் சம்பந்தப்பட்ட விடயமாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான ஓர் உறவு பாலமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயற்பட்டு வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது என குறிப்பிட்டுள்ளார். * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…