பிரித்தானியாவில் 40 வயது நபருக்கு நேர்ந்த கதி! August 24, 2023 9:54 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest பிரித்தானியாவின் பிரிஸ்டல் பகுதியை சேர்ந்த 40 வயது மனிதர் உயிரிழந்ததை தொடர்ந்து மிகப்பெரிய வெளிப்புற பூங்கா அடைக்கப்பட்டுள்ளது. டெவோனின் பிங்க்டனில்(Paignton) உள்ள ஸ்ப்ளாஷ் டவுன் குவேவெஸ்ட் என்ற மிகப்பெரிய வெளிப்புற பூங்காவில் 40 வயது மனிதர் ஒருவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். சம்பந்தப்பட்ட நபருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து ஸ்ப்ளாஷ் டவுன் குவேவெஸ்ட்(Splashdown Quaywest) பகுதிக்கு அவசர சேவைகள் விரைவாக அழைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்ட பிறகும், பிரிஸ்டல்(Bristol) பகுதியை சேர்ந்த 40 வயது மனிதர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என டெவோன் மற்றும் கார்ன்வால் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 23ம் திகதி புதன்கிழமை பிற்பகலில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.ஆனால் சிகிச்சை பலனின்றி நபர் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பிங்க்டனில்(Paignton) உள்ள வெளிப்புற பூங்கா தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் உடைகள்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… ஈரானில் மூன்று மரண தண்டனையில் இருந்து தப்பிய நபர் சிறையில் பரிதாப மரணம்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… கனடாவில் உணவுப் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…