திருகோணமலையில் புதிய வழிபாட்டுத் தலங்கள் – ரணில் முக்கிய உத்தரவு!

திருகோணமலை மாவட்டத்தில் புதிய மத வழிபாட்டுத் தலங்களை எதிர்காலத்தில் நிர்மாணிக்கும்போது, கிழக்கு மாகாண ஆளுநர், மாவட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணித்துள்ளார்.
    
திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம் நேற்று திருகோணமலை விமானப்படை தளத்தில் நடைபெற்றது.இதன்போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!