மிக விரைவில் அறிவிப்பேன் – சபாநாயகர்

எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடிதன் பின்னர் சட்ட ஆலோசனைகளை பெற்று இவ்வாரமளவில் அது தொடர்பான இறுதி முடிவினை அறிவிப்பேன் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

எதிர்க்­கட்சி தலைவர் பதவி குறித்து நேற்று பாராளுமன்றில் கடும் சர்ச்சை ஏற்­பட்டது. அதிக ஆச­னங்­களை கொண்ட குழு என்ற அடிப்­ப­டையில் தமக்கே எதிர்க்­கட்சி தலைவர் பதவி வழங்­கப்­பட வேண்டும் என கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் கோரிக்கை விடுத்­தனர். இதன்போதே சபாநாயகர் மேற்கண்ட அறிவிப்பினை விடுத்தார்.

எந்தவொரு அழுத்தமும் என்மீது பிரயோகிக்கப்படவில்லை. நான் அழுத்தங்களுக்கு அடிப்பணிய மாட்டேன் என்றும் சுட்டிக்காட்டினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!