எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பில் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடிதன் பின்னர் சட்ட ஆலோசனைகளை பெற்று இவ்வாரமளவில் அது தொடர்பான இறுதி முடிவினை அறிவிப்பேன் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து நேற்று பாராளுமன்றில் கடும் சர்ச்சை ஏற்பட்டது. அதிக ஆசனங்களை கொண்ட குழு என்ற அடிப்படையில் தமக்கே எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இதன்போதே சபாநாயகர் மேற்கண்ட அறிவிப்பினை விடுத்தார்.
எந்தவொரு அழுத்தமும் என்மீது பிரயோகிக்கப்படவில்லை. நான் அழுத்தங்களுக்கு அடிப்பணிய மாட்டேன் என்றும் சுட்டிக்காட்டினார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!