நல்லூர் கந்தனின் வருடாந்த பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 25 தினங்கள் நடைபெறவுள்ள மஹோற்சவத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல்-05 மணிக்குத் திருமஞ்சத் திருவிழாவும் அடுத்த மாதம் 01 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல்- 06 மணிக்கு அருணகிரிநாதர் உற்சவமும், நடைபெறும்.

அடுத்த மாதம், 02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்- 06 மணிக்கு கார்த்திகை உற்சவமும் 03 ஆம் திகதி திங்கட்கிழமை காலை- 07 மணிக்கு சூர்யோற்சவமும் 04 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-07 மணிக்குச் சந்தான கோபாலர் உற்சவமும் அன்றைய தினம் பிற்பகல்- 05 மணிக்கு கைலாசவாகன உற்சவமும் இடம்பெறும்.

செப்ரெம்பர் 05 ஆம் திகதி புதன்கிழமை காலை- 07 மணிக்கு கஜவல்லி மஹாவல்லி உற்சவமும் பிற்பகல்- 05 மணிக்கு வேல் விமான உற்சவமும், 06 ஆம் திகதி வியாழக்கிழமை காலை- 07 மணிக்கு தண்டாயுதபாணி உற்சவமும் பிற்பகல்-05 மணிக்கு ஒருமுகத் திருவிழாவும் 07 ஆம் திகதி பிற்பகல்- 05 மணிக்குச் சப்பறத் திருவிழாவும் 08 ஆம் திகதி சனிக்கிழமை காலை-07 மணிக்குத் தேர்த் திருவிழாவும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை -07 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும் மாலை துவஜாவரோஹன (கொடியிறக்க) வைபவமும் இடம்பெறும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!