அண்ணன் இறந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிர்விட்ட கர்ப்பிணித் தங்கை

இங்கிலாந்தில் தனது அண்ணன் உயிரிழந்த செய்தியை கேட்டு கர்ப்பிணியாக இருந்த தங்கை அதிர்ச்சியில் நினைவை இழந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சுல்தானா அக்தீர் (39) என்ற பெண்மணிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். இவர் கருவுற்று 26 வாரமாகியுள்ளது.

இந்நிலையில், இவரது அண்ணன் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைகேட்டு அதிர்ச்சியடைந்தவர், தலைசுற்றுவதாக கூறி அப்படியே கீழே அமர்ந்துள்ளார். அதனைத்தொடர்ந்து அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவர் சுயநினைவை இழந்த காரணத்தால், அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வைத்தியர்கள் எடுத்துள்ளனர்.

ஆனால், சுல்தானா அக்தீர் நினைவு திரும்பாமல் உயிரிழந்துள்ளார்.

பிறந்த குழந்தையும் சுமார் 15 நிமிடங்களுக்கு எவ்வித உணர்வும் இன்றி இருந்து, அதன்பின்னர் அழ ஆரம்பித்து, பின்னர் இக்குழந்தையும், சிறிது நேரம் கழித்து இறந்துவிட்டது.

இப்பெண் உயிரிழந்தபோது இவரது கணவர் வங்கதேசத்திற்கு சுற்றுலா சென்றிருந்துள்ளார். இந்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டு உடனடியாக வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!