அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு சிறிலங்கா கடற்படையிடமே

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் பாதுகாப்பு சிறிலங்கா கடற்படையினரிடமே உள்ளது என்றும், அது சீனர்களின் கையில் இல்லை என்றும், அங்கு பணியாற்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செயற்பாடுகள் குறித்து பார்வையிட நேற்று முதல்முறையாக அனுமதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் குழுவிடமே, துறைமுகத்தை இயக்கும் சீன நிறுவனத்தில் பணியாற்றும் உள்ளூர் அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில், சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து பணியாற்றுவது குறித்து சீனர்கள் பிரச்சினை எழுப்பவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!