பாராளுமன்றத் தேர்தலை நடத்துங்கள் ; மஹிந்த ராஜபக்ஷ

நாட்டுக்கு நிரந்தரமான அரசை உருவாக்க வேண்டும் என்பதுடன் நாட்டுக்கு பொருத்தமான அரசியலை சூழலை உருவாக்கவேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் அரசியலில் சரிவு மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் உறுதியற்ற தன்மை காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் வீழ்ச்சியடைந்துள்ளன.

இந்நிலையில் நாட்டில் முதலீடுசெய்வோருக்கு ஒரு நிலையான அரசாங்கம் அவசியம்.

நாட்டுக்கு பொருத்தமான அரசியலை நடைமுறைப்படுத்த பாராளுமன்ற தேர்தலை நடத்தவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!