சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்படுகிறார் ஞானசார தேரர்

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளாரென ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இன்று சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளதாக ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கடுமையான உழைப்புடன் கூடிய 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!