சீன நாட்டின் ஹூனான் மாகாணத்தில் மக்கள் அதிகம் கூடியிருந்த பகுதியில் நேற்று இரவு வேகமாக வந்த கார் ஒன்று மக்கள் கூட்டத்தில் மோதியதில் பலர் படுகாயமடைந்தனர்.
மக்கள் மீது மோதிய காரிலிருந்து இறங்கிய சாரதி சரமாறியாக மக்கள் கூட்டத்தில் உள்ளோரை கத்தியால் குத்தியுள்ளார்.
இதனால் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதோடு 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்த பொலிஸார் குறித்த காரின் சாரதியை மடக்கிப் பிடித்து விசாரணை செய்துள்ளனர்.
விசாரணையில் சந்தேக நபர் 54 வயதான யாங் ஜான்யுன் என்றும் அவர் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை பெற்றவர் என்றும் தெரிய வந்துள்ளது.
சீனாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவமும் பொருளாதார ஏற்றத்தாழ்வின் விளைவு என அந் நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!