காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரும் புலிகள் தான்! – அடித்துச் சொல்லும் எஸ்.பி, டிலான்

காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவருமே விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டவர்கள், ஆயுத மோதலின் போதே பிரதான புலிகள் காணாமல் போனார்கள். இவர்கள் குறித்து பாதுகாப்பு படைகளின் பிரதானியை தண்டிக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சுயாதீன அணியைச் சேர்ந்த டிலான் பெரேரா, எஸ்.பி திசாநாயக ஆகியோர் தெரிவித்தனர்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர்கள், கடத்தப்பட்டவர்கள் மாணவர்களா, அல்லது வேறு யாருமா என தெரியாது. ஆனால் இந்த காலத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு, கடத்தல், கொலை, கைதுகள் என அனைத்துமே விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டவை எனவும் கூறினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!