டிலானுக்கும், எஸ்.பிக்கும் புத்திசுவாதீனம் இல்லை! – என்கிறார் சரத் பொன்சேகா

சுவாதீனமின்றி கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின்போது, இராணுவத்தினரிடம் சரணடைந்த கேணல் ரமேஷ் பின்னர் கொலைசெய்யப்பட்டதாக அண்மையில் எஸ்.பி திசாநாயக்க குறிப்பிட்டிருந்தார். இந்த விடயம் தொடர்பில் அப்போதைய இராணுவத் தளபதியாக இருந்த அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்தப்படவேண்டும் என எஸ். பி திஸாநாயக்க கூறியிருந்தார். இதுதொடர்பில், ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோதே அமைச்சர் சரத் பொன்சேகா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரும், பொலிஸாரும் அறியாத விடயங்களையும் வெளியிட்டுவரும் குறித்த இருவருக்கும் ஓய்வு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!