அரசியல் அமைப்பில் தமிழரின் உரிமைகள் வழங்கப்பட்டிருந்தால் அவர்கள் எக்காரணம் கொண்டும் ஆயுதமேந்தியிருக்க மாட்டார்கள் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே அவர் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“சகல மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் அமைப்பினை உருவாக்கி தீர்வுகளை பெற்றுக்கொடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி தயாராகவே உள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பழைய முறைமையில் தேர்தலை நடத்த இணக்கம் தெரிவித்திருந்தால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே மாகாணசபை தேர்தலை நடத்தியிருக்க முடியும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!