மத்ரஸாக்கள், அரபுக் கல்லூரிகளை மீளப் பதிவு செய்து முழுமையான மறுசீரமைப்பொன்றை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கைகள் எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் குறித்த பதிவுகளுக்கு இராணுவத்தைப் பயன்படுத்துவதனூடாக முஸ்லிம் மக்களை அச்சுறுத்த வேண்டாமென கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி நடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 19 முஸ்லிம் உறுப்பிபினர்கள் இருக்கின்ற நிலையில், பிரதமர் தனித்து சுயாதீனமாக செயற்படாது மக்கள் பிரதிநிதிகளிடம் பேச்சு நடத்தி ஆலோசனை பெற்று செயற்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் நாட்டிலுள்ள பெரும்பாலான மத்ரஸாக்களும் அரபுக் கல்லூரிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும், புதிதாக மீண்டும் பதிவு நடவடிக்கைகளை ஏன் மேற்கொள்ள வேண்டுமென்றும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!