வடக்கில் நேற்று 15 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் 12 பேர் அடங்கலாக வடக்கில் நேற்று 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சிறைச்சாலையைச் சேர்ந்தவர்கள் 6 பேருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒருவருக்கும், உடுவில் வைத்திய அதிகாரி பிரிவில் பாடசாலை ஒன்றின் அதிபர், ஆசிரியராகச் சேவையாற்றுபவர்கள் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறை வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளரு், அவர்களில் இருவர் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் என்றும் பருத்தித்துறை நீதிமன்ற உத்தியோகத்தரான மற்றவரின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலை உத்தியோகத்தர்களாக பணியாற்றுகின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கும், வவுனியா வைத்தியசாலையில் ஒருவருக்கும் தொற்று உறுதியானது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!